இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளது.
சவூதியில் நடந்த 14 ஆவது தேசிய மாநாட்டில் இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்தத் தீர்மானத்தில் இலங்கை தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் மாநாடு கவனம் செலுத்தியதுடன் கண்டனத்தையும் தெரிவிக்கின்றது.முஸ்லிம்களுக்கான பாதுகா ப்பை உறுதிப்படுத்துமாறும் மாநாடு கோருகின்றது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

0 comments: