Showing posts with label GULF. Show all posts
Showing posts with label GULF. Show all posts

Monday, June 10, 2019

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்! கத்தார் முதலாம் இடம் பெற்று அசத்தல்!

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்! கத்தார் முதலாம் இடம் பெற்று அசத்தல்!

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலை Global Finance சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன்படி கத்தார் இராச்சியம் 134,623 GDPகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சவூதிக் கூட்டணி நாடுகள் தொடர்பை துண்டித்த பின்னர் கத்தார் பொருளாராத ரீதியாக வீழ்ச்சியடையவில்லை என்பது இதன் மூலம் தெரிவாகின்றது. 

முதல்  10 இடங்களைப் பெற்றுள்ள நாடுகள் வருமாறு


முதல் 10 இடங்களுக்குள் 3 அரபு நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.  முதல் இடத்த்தில் கத்தாரும், 8 வது இடத்தில் அமீரகமும், 9 வது இடத்தில் குவைத்தும் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 12வது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை 99ம் இடத்திலும், தன்னை வல்லசாக்க எத்தனிக்கும் இந்தியா 124 வது இடத்திலும், பாகிஸ்தான் 138வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

Tuesday, June 4, 2019

முஸ்லிம்களின் பாது­காப்பை இலங்கை உறு­திப்­ப­டுத்த வேண்டும் -இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்பு

முஸ்லிம்களின் பாது­காப்பை இலங்கை உறு­திப்­ப­டுத்த வேண்டும் -இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்பு

இலங்­கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்­தப்­பட்ட வன்­மு­றைகள் குறித்து கவலை வெளி­யிட்­டுள்ள இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்­பான ஓ.ஐ.சி முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­மாறும் கேட்­டுள்­ளது.
சவூ­தியில் நடந்த 14 ஆவது தேசிய மாநாட்டில் இது தொடர்பில் தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
அந்தத் தீர்­மா­னத்தில் இலங்கை தொடர்­பான விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் மாநாடு கவனம் செலுத்­தி­ய­துடன்  கண்­ட­னத்­தையும் தெரி­விக்­கின்­றது.முஸ்­லிம்­க­ளுக்­கான பாது­கா ப்பை உறுதிப்படுத்துமாறும் மாநாடு கோருகின்றது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

Monday, June 3, 2019

சவுதியில் நாளை செவ்வாய்கிழமை, பெருநாள் என அறிவிப்பு

சவுதியில் நாளை செவ்வாய்கிழமை, பெருநாள் என அறிவிப்பு

சவுதியில் நாளைசெவ்வாய்கிழமை பெருநாள் என அறிவிப்பு

Eid Al-Fitr moon on today, Saudi Arabia calls for sighting Shawwal
ரமலான் முடிந்ததும் சவுதியில் இந்த மூன்று அறிஞர்களுக்கும் மரண தண்டனை

ரமலான் முடிந்ததும் சவுதியில் இந்த மூன்று அறிஞர்களுக்கும் மரண தண்டனை

ரமலான் முடிந்ததும் சவுதியில் மூன்று அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள ஷேக் சல்மான் அல்-அத்வா, அவத் அல்-குர்னி மற்றும் அலி அல்-ஓமரி ஆகியோருக்கு ரமலான் முடிந்ததும், சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் இருந்து அறிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் Middle East Eye இணையதளம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

அல்-அத்வா என்பவர் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த ஒரு "இஸ்லாமிய சீர்திருத்தவாதி". அல்-குர்னி ஒரு போதகர், அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அல்-ஓமரி நன்கு அறியப்பட்ட ஒளிபரப்பாளர் ஆவார்.

இவர்கள் மூவரும் 2017 ம் ஆண்டு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்ட கைது அலையின் போது கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூன்று பேரும் கடந்த மே 1ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் திகதி குறிப்பிடாமலேயே வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சவுதியில் கடந்த ஏப்ரல் 23ம் திகதியன்று ஒரே நாளில் 32 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன்காரணமாக பல நாடுகளில் இருந்து எதிர்வினைகள் ஆற்றப்பட்டன.

இந்த சம்பவமானது சர்வதேச கண்டனம் எவ்வளவு வலிமையானது என்பதைக் கண்டறிய ஒரு சோதனை பலூனாக பயன்படுத்தப்பட்டது என ஒரு ஆதாரம் தெரிவிக்கிறது.

Wednesday, May 29, 2019

3 மாதத்துக்கு மேல் சம்பளம் கிடைக்காவிட்டால் கம்பெனிக்கு எதிராக எவ்வாறு Labour Department இல் முறையீடு செய்வது என்பது பற்றிய விளக்கம்.

3 மாதத்துக்கு மேல் சம்பளம் கிடைக்காவிட்டால் கம்பெனிக்கு எதிராக எவ்வாறு Labour Department இல் முறையீடு செய்வது என்பது பற்றிய விளக்கம்.


3 மாதத்துக்கு மேல் சம்பளம் கிடைக்காவிட்டால் கம்பெனிக்கு எதிராக எவ்வாறு Labour Department இல் முறையீடு செய்வது என்பது பற்றிய விளக்கம்.
1. உங்களுடைய கம்பனியின் முகாமையாளர் (Manager) அல்லது மன்தூப் (PRO) இனுடைய தொலைபேசி இலக்கத்தை தெரிந்து வைத்துக்கொள்வதுடன் கம்பனியின் முழுப் பெயர் மற்றும் முகவரியும் தெரிந்திருக்க வேண்டும்.
2. அல் அட்டியா (Al Attiya) இல் அமைந்திருக்கும் Street 13 க்கு செல்லுங்கள் அதிகமான Taxi Driver களுக்கு தெரிந்திருக்கும்.
3. Reception இல் முறையீடு செய்வதற்கு ஒரு Form தருவார்கள், அதனை பூர்த்தி செய்து முறையீடுகளை பெறுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில ஒப்படைத்து உங்களுடைடைய பிரச்சினைகளை சுருக்கமாக அந்த நபரிடம் கூறவும்.
4. முறையீடு பெற்றுக் கொள்ளும் அதிகாரி உங்களுடைய கம்பனி முகாமையாளர் (Manager) அல்லது மன்தூப் (PRO) க்கு Call எடுத்து அவர்களுடைய பதிலையும் செவிமடுத்து தீர்வினை கூறுவார்.
5. இந்த தீர்வானது சில நேரங்களில் உடனடியாகவும் அல்லது சில வாரங்களும் எடுக்கலாம்.
கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்
1. Passport 
2. ID
3. உங்கள் வங்கி கணக்கு விபரம் (Last 6 months)
4. காசாக அல்லது காசோலையாக பெறுவதாயின் Payslip