உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் பிரதான சந்தேக நபர் சஹ்ரான் ஹிசிமின் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு, முன்னாள் அஞ்சல் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் ஏ.எச்.ஏம்.ஹலீமின் சகோதரரான சஹீமின் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்கு குழுவில் இன்றைய தினம் சாட்சி வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலியுடன், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி மௌலவி மற்றும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்கத்தின் தலைவர் மொஹமட் சுபய்யும் அந்த தெரிவுக் குழுவில் சாட்சி வழங்கியுள்ளனர்.

0 comments: