Monday, June 3, 2019

ரதன தேரருக்காக ராஜினாமா செய்யவில்லை, முஸ்லிம் சமுதாயத்திற்காகவே பதவிகளை துறக்கிறோம் - றிசாத்

முஸ்லிம் அரசியல்வாதிகள் ராஜினாமா செய்வதற்கான காரணம், அத்துரலிய ரத்தின தேரர் அல்ல. நாங்கள் அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவே துறக்கிறோம் என றிசாத் பதியுதீன் சற்றுமுன் jaffna muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ராஜினாமா செய்து சுயாதீனமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் எமது குரல்களை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யமுடியுமென எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Author: verified_user

0 comments: