Saturday, May 25, 2019

80000 சிங்களவர்களையும் 30000 தமிழர்களையும் இஸ்லாத்திற்கு மாற்றியுள்ளனர்.

மத்திய கிழக்கிற்கு சென்ற 80000 சிங்களவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனனர் என நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்ட கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் , தமிழ் மக்கள் 30000 பேரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். மீண்டும் தன்னை சிறையில் அடைத்தாலும் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறுன நாளிதழுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பன்சலைகள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் திட்டம் தொடர்பில் தான் ஜானாதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அந்த செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.

Author: verified_user

0 comments: