Wednesday, May 8, 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 41 பேர் கைது

திருகோணமலையை அண்டிய கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படையினர் திருகோணமலையை அண்டியக் கடற்பகுதியில் நேற்று மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே குறித்த 41 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
திருகோணமலை மற்றும் கின்னியாவைச் சேர்ந்த 18 - 60 வயதிற்கிடைப்பட்ட வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 5மீன்பிடி படகுகளும் , 5 வெளி இணைப்பு மோட்டார்களும் , 225 மீட்டர் நீளமான 5 சட்டவிரோத வலைகளும் மற்றும் 94 கிலோ கிராம் தொகை மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பிரதி கடல்வள பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Author: verified_user

0 comments: