Showing posts with label LOCAL NEWS. Show all posts
Showing posts with label LOCAL NEWS. Show all posts

Tuesday, October 15, 2019

வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய

வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று -15- ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது கோத்தாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நான் ஜனாதிபதியானால் அங்கீகரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்லவெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை மையப்படுத்தியே ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவளிக்கின்றார் எனவும் இதன்போது தெரிவித்தார் கோத்தாபய ராஜபக்ஷ.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம் எனவும்  இராணுவத்திற்கு தான் தலைமைதாங்கவில்லையெனவும் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இதன் போது ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றவுடன் பிரதமர் பதவி மாறும் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 19 ஆவது அரசியலமைப்பே கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்க காரணம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! சற்று முன் அறிவிப்பு..!

தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! சற்று முன் அறிவிப்பு..!


இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர் அமைச்சர் திகாம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தொகையை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்று வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, October 13, 2019

வறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...!

வறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...!



“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்டு குடிவந்தோம்.

எனது தந்தை நில அளவை ஊழியர். அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது. இரவு நேரம் படிப்பதற்காக தபால் கந்தோருக்கு வருவோம். மின் விளக்கொளியில் படிப்பதற்கு இருந்த இடம், இந்த தபால் கத்தோர்தான்.

விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் விளாம்பழம் விற்போம். எனது அக்காவும் அம்மாவும் இந்த கூட்டத்துக்கு வந்திருக்குறாங்க. அக்காவின் கையில் தீக் காயத்தின் தழும்பு இருக்கும். அது கூலிக்கு பனியாரம் சமைக்கும்போது ஏற்பட்ட தீக் காயம்.

அன்று தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒரு தமிழ் ஐயா. எனது தந்தை வேலை செய்த நில அளவை அலுவலகத்தின் பிரதானி ஒரு தமிழ் ஐயா. தம்புத்தேகம புகையிரத நிலைய அதிகாரியும் ஒரு தமிழ் ஐயா. நாங்கள் அவர்களோடு நெருக்கமாக வாழ்ந்தோம். ஆனால் ஆட்சியாளர்கள் எங்களுக்கிடையில் ஒரு யுத்தத்தைச் சுமத்தி அவை அனைத்தையும் இல்லாமலாக்கினார்கள். எங்களோடு நெருக்கமாக வாழ்ந்த பலரை நாங்கள் இழந்திருக்கின்றோம். அந்த வேதனையையும் வலியையும் நாங்கள் அறிவோம்.

ஏழ்மையின் வெறுமையை நன்கு அறிந்தவர்கள் நாங்கள். குடியிருக்க உருப்படியான வீடு இல்லையென்றால், பிள்ளைகளுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லையென்றால், ஒழுங்கான சுகாதார சேவை இல்லையென்றால், மனதுக்கு ஓய்வு இல்லையென்றால், அந்த இடத்தில் நாம் வாழத்தான் வேண்டுமா?

கடந்த 71 வருடங்களாக, எனது பெற்றாரும்தான், பிழையான அரசியலொன்றை தெரிவுசெய்திருந்தார்கள். ஆயிரம் எதிர்பார்ப்புக்களுடன் ஓர் அரசியல் கட்சிக்கு அவர்கள் வாக்களித்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் எதனையும் அவர்களால் நிறைவுசெய்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

நாம் உங்கள் மக்கள். மக்களின் பிரதிநிதிகள். இனியும் நீங்கள் எங்களைப் புறக்கணிப்பது நியாயமாகாது. அந்த வெற்றிடங்களை நிறைவுசெய்யும் நோக்கோடு உங்களுக்காக, இந்த நாட்டுக்காக, நாட்டின் எதிர்காலத்துக்காக ஜனாதிபதி தேர்தலுக்கு வந்திருக்கின்றோம்.

71 வருடங்களாக கிடைக்காத சந்தோஷத்தையும் நிம்மதியையும் பெற்றுக்கொள்ளும் பாதையொன்றை திறந்து தருவோம்”

____________________________________
2019.10.08 ஆம் திகதி தனது சொந்த ஊரான தம்புத்தேகமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக ஆற்றிய உரையில் இருந்து
ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் - ஹக்கீம்

ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் - ஹக்கீம்

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். 
இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்ப வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் வேட்பாளரை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் எடுக்கும் சதித்திட்டமாகும் என்றும் அவர் கூறினார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா போட்டியிட தீர்மானம் எடுத்துள்ள நிலையில் முஸ்லிம் தலைமைகளின் கருத்து குறித்து தெரிவிக்கையில் அவர் இவற்றைக் கூறினார். 
போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு அதிமேதகு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வீதி பயணத்தின் போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச்சீட்டு  வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைச்சீட்டில் தண்டனைகள் என்ன ஏது என்பது தொடர்பில் சிங்கள மொழியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன.

 வடமகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் இதுதொடர்பில் தமக்கு தெளிவின்மை காணப்படுவதாகவும் இதனை மாற்றியமைத்து தமிழில் அவை வழங்கப்படவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறித்த தண்டனைச்சீட்டில்  மூன்று மொழிகளிலும் தண்டனைகள் என்ன என்பது தொடர்பில் குறிப்பிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறாக தண்டனைச்சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைப்பட்டியலில் இலகுவில் அறிந்துகொள்ளமுடியும் .
 போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலினை தொடர்ந்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சு.கவின் தலைமைப்பதவியை துறந்த மைத்திரி பிறப்பித்துள்ள கடும் உத்தரவு

சு.கவின் தலைமைப்பதவியை துறந்த மைத்திரி பிறப்பித்துள்ள கடும் உத்தரவு

சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியைத் துறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் தலைமையகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக, கட்சியின் தலைமையகத்தின் பாதுகாப்பிற்காக ஜனாதிபதி பாதுகாப்பு பரிவினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது கட்சியின் தலைமைப்பதிவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரி விலகியுள்ள நிலையில் அப்பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற விடயம் அவருடைய கவனத்திற்கு தலைமையகத்தில் கடமையாற்றும் முக்கிஸ்தர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சமயத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினைச் சேர்ந்தவர்களே தலைமையகத்தின் பாதுகாப்பு கடமையில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும், தன்னுடைய அனுமதியின்றி தலைமையக பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு விடயத்திலும் முடிவுகளை எடுக்கவேண்டாம் என்றும் கடுமையான உத்தரவினை அலுவலகத்தில் கடமையாற்றும் முக்கிஸ்தர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.
UNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..?

UNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..?


காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல வாத பிரதிவாதங்கள் நடந்தேறி வருகின்றது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது உண்மைத் தகவல், ணையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

அதாவது,

காலிமுகத்திடலில் சஜித் ஆதரவு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், மற்றும் மனோ கணேசன் ஆகியோருக்கு தலா 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் மேற் குறிப்பிட்ட 3 அமைச்சர்களில் ஒருவருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது ஒரு அரசியல் தரப்பின் ஆதரவாளர்கள் சிலர் குறித்த கூட்டத்தில் சிறுபான்மை அமைச்சர் ஒருவர் உரையாற்றும் போது கூச்சலிட்டு, குழப்புவதுடன் இதன்போது ஹிரு தொலைக்காட்சி அதனை விசேட படமாக்கவும் திட்டமிட்டிருந்துள்ளது.

இதனையடுத்தே 3 அமைச்சர்களும் மேடையில் வைத்தே கலந்துரையாடி, தாம் மூவரும் இந்த கூட்டத்தில் உரையாற்றுவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

இதுவே நடந்த உண்மைச் சம்பவமாகும்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக இடம்பெறும் நிதிமோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் நடவடிக்கை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சந்தேகநபர்கள் சமூக வலைத்தளங்களூடாக, நண்பர்களாக இணைந்துகொண்டு, நம்பிக்கையை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெவ்வேறு நாடுகளில் சீட்டிழுப்பில் வெற்றிபெற்றுள்ளதாக அல்லது பரிசுகள் வெற்றிகொண்டுள்ளதாகத் தெரிவித்து, அவை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர்கள் பொய்யுரைப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெற்றிகொண்ட பரிசுப் பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொள்வதற்கு பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்து, சந்தேகநபர்கள் தமது வங்கிக் கணக்குகளுக்கு மக்களிடமிருந்து பணத்தை வைப்பிலிட்டுக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு பணம் அல்லது பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பணத்தை வைப்பிலிடுவதாயின், பொறுப்பு வாய்ந்த நிறுவனத்திடம் கேட்டறிந்து கொள்ளுமாறு பொலிஸார், மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
சிலோன் தவ்ஹீத் ஜமாத்தின், ஆதரவு கோதாபாயவுக்கா...?

சிலோன் தவ்ஹீத் ஜமாத்தின், ஆதரவு கோதாபாயவுக்கா...?

சூடுபிடித்துள்ள தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அரசியலில் ஆளாளுக்குக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதையும், விமர்சனக் கணைகளை அள்ளி வீசுவதையும், தத்தமது ஆதரவுகளை ஒவ்வொரு சாராருக்கும் தெரிவிப்பதையும் அன்றாடம் கண்டு வருகின்றோம்.
அது அவரவர்களுடைய தேர்வு, மற்றும் கருத்துச் சுதந்திரங்களாகும்.
அதில் முஸ்லிம்களும் முத்தரப்பையும் ஆதரிப்பவர்களாக பிரிந்து கிடந்து அரசியல் பேசுவதையும் , ஆதரவுகளைத் தெரிவிப்பதையும் அவதானிக்கக் கிடைக்கின்றது. அதுவும் ஒவ்வொரு தனிநபர் சுதந்திரமெனலாம்.

ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் , முஸ்லி சமூகத்தின் வாக்குகளின் வகிபங்கென்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.

காரணம், தற்போதைய நல்லாட்சி(?) யிலும் சரி, இதற்கு முந்தைய பொல்லாட்சியிலும் சரி , முஸ்லிம் சமூகம் பலவிதமான இனவாத செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டு , பல்வேறு இழப்புக்களையும் சந்தித்து நிர்க்கதியாக்கப்பட்டிருந்தது என்பது மறக்கவோ மறைக்கவோ முடியாத கசப்பான உண்மைகளாகும்.

இப்படியான அசாதாரண சூழ்நிலையில் எதிர்நோக்கியிருக்கும் ஜனாதிபதித் தேர்தலானது முஸ்லிம் சமூகத்திற்கு மிக முக்கியமானதொரு தருணமாகும். எமது இருப்பையும், பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சிறந்த தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தேவையும் காலத்தின் இன்றியமையாக் கட்டாயக் கடமையாகும்.

ஓட்டுக்களை நரித்தனமாக சூறையாடுவதற்கான சதித்திட்டங்கள் ஆங்காங்கே நாசூக்காக அமுல் படுத்தப்படுகிறன. ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாக்குகளும் ஒருமுகப்படுத்தப் பட்டு ஓர் பேரம் பேசும் அரசியலை உண்டாக்குவதற்கான முயற்சியே சமூக மன்றத்தில் மேற்கொள்ளப் பட வேண்டும். அதற்காகன அறிவுறுத்தல்களே மக்களைச் சென்றடைய வேண்டிய தேவையுள்ளது. அதை முஸ்லிம் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் ஒன்று கூடி தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

யார் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் இருக்க வேண்டும். தங்களையும், தங்களது உடமைகளையும், பதவியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மேற்படி தேர்தலில் மக்களது வாக்குகளை வீணாக்கிவிடாமல், சிறந்த தீர்மானங்களையும், திட்டங்களையும், உடன்படிக்கைகளையும் சமூகத் தலைவர்கள் கண்டிப்பாக மேற்கொண்டாக வேண்டும். அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் அனைவருக்கும் இது தார்மீகப் பொறுப்பாகும்.

இவ்வாறான ஒரு சூழலில் குறிப்பாக நேற்றைய தினத்திலிருந்து CEYLON THAWHEEDH JAMATH (CTJ) இன் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் அவர்களது பெயரால் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது, "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 
CEYLON THAWHEEDH JAMATH (CTJ) இன் ஆதரவு கோதாபாய ராஜபக்ஷ அவர்களுக்கே" என்று சகோதரர் அப்துல் ராஸிக் அவர்கள் தெரிவித்ததாக ஒரு பொய்யான திரிவுபடுத்தப் பட்ட தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

இதன் உண்மை நிலை என்ன?

கீழே பதிவிடப்பட்டுள்ள லிங்கில் சகோதரர் அப்துல் ராஸிக் அவர்கள் குறிப்பிட்ட ஒரு கருத்தையே திரிவுபடுத்தி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் அவர் என்ன குறிப்பிட்டுள்ளார் ? என்பதை நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

"நாட்டின் தேசிய பாதுகாப்பையும் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுக்கும் நபருக்கே முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் சரியே. இந்த கோரிக்கைகளுக்கு எந்த வேட்பாளர் உடன்படுகிறாரோ, எழுத்தில் ஒப்பந்தம் செய்கிறாரோ அவருக்கே நம் வாக்குகள் சென்றடைய வேண்டும். கட்சி அரசியல் செய்யும் காலம் அல்ல இது. சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யப்பட வேண்டிய தருணம் இது” என்றே அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை கூறுகிறார்.

“அவர் யார் என்பதை முஸ்லிம் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்பதே நம் நிலைபாடு" என்றும் இறுதியில் தெளிவாக தம் முடிவையும் குறிப்பிட்டுள்ளார்.

https://youtu.be/e9_838cJh9w

👆👆👆

எதற்காக இந்த அரசியல் நாடகம்?
================================
🔴அவதூறுகளை அள்ளி விட்டு கருத்தாடல்களையும் இறுதி முடிவையும் கவனிக்காமல் பொய்யான செய்திகளை மக்கள் மயப்படுத்தி சிலோன் தெளஹீத் ஜமாஅத்தும் அரசியல் செய்யும் ஜமாஅத் என்பதைப்போல் காட்ட முனைவது.

🔴இதன் மூலம் ஜமாஅத்தை நம்பியிருக்கும் மக்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கையை ஜமாஅத் மீது உண்டாக்குவது.

🔴சகோதரர் அப்துல் ராசிக் கோத்தாப்பாயவுடைய ஆதரவாளர் என்று காட்ட முனைவது, அல்லது எதிரியாக்கத் திட்டமிடுவது.

🔴மக்களுடைய சிந்தனைகளைத் திசைதிருப்புவது.

போன்ற பல காரணங்களைக் குறிப்பிடலாம்.

இத்தகைய அவதூறான தகவல்களைப் புனைந்து பரப்பும் கள்ளப் பேர்வழிகளையும், இதன் உண்மைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் அப்படியே அந்தத் தகவல்களைப் பரப்பும் தவறைச் செய்பவர்களையும் எச்சரிக்கின்றோம்.

ஏதோ ஒரு உள்நோக்கத்தில் எவனோ ஒரு பாவி இவ்வாறு தகவல் பரிமாறுகிறான். மக்களை திசை திருப்புகிறான்.

ஒரு தகவலைக் கொண்டுவந்தால் முதலாவது , முஸ்லிம்கள் அது குறித்த தெளிவைப் பெற்ற பின்பே பரப்புவதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர வேண்டும். இதுவே திருமறையின் அறிவுரை.

‎يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 49:6

எனவே குறித்த சகோதரர் அப்துல் ராசிக் அவர்களது பெயரால் ஒரு செய்தி பரப்பப்பட்டுக் கொண்டிக்கின்றதென்றால் அது பொய்யானது என்பதைப் புரிந்து மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தோ சகோதரர் அப்துல் ராசிக் அவர்களோ அரசியல் களத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் பணியாற்றுபவர்கள் அல்ல என்பதை இதன் மூலம் அறிவித்து கொள்கிறோம்.

ஏ. எல். எம். ரிஸான்
தலைவர்
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்
"அரசியலில் பட்டம் பெற்ற நான், வெற்றி பெற முடியாத தேர்தலில் போட்டியிடுவதற்கு முட்டாள் அல்ல"

"அரசியலில் பட்டம் பெற்ற நான், வெற்றி பெற முடியாத தேர்தலில் போட்டியிடுவதற்கு முட்டாள் அல்ல"

ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட விரும்பாத போதும் காலத்தின் தேவையின் காரணமாக களத்தில் குறித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மனச்சாட்சி உறுத்தலாக இருந்ததது. போட்டியிடாமல் விலகியிருக்க எண்ணினேன். இதிலிருந்து தப்பிப்பதற்காக நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தேன்.

எனினும் காலத்தின் தேவை தேர்தலில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் ஜனாதிபதி வேட்பாளர்களின் வாக்குகளை உடைப்பது எனது நோக்கம் அல்ல.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் நான் போட்டியிடுவதாக எனது சமூகத்தை சேர்ந்தவர்களை என்னை தூற்றுகின்றார்கள்.

மட்டக்களப்பில் தமிழ் மக்களும் எனக்கு வாக்களிப்பார்கள். யுத்த காலத்திலிருந்து அவர்களை நானே பாதுகாத்து வருகிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் செய்து கொடுத்துள்ளேன். இதன் காரணமாக மட்டகளப்பிலுள்ள அனைத்து மக்களும் எனக்கு விசுவாசமாக செயற்பாடுவார்கள்.

தனக்கு வாக்களிப்பதன் மூலம் தான் உருவாக்கும் ஜனாதிபதி ஊடாக தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களை பெற்றுக் கொடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸஸவை தோல்வி அடையச் செய்வதற்காக கோத்தபாயவினால் நான் களமிறக்கப்பட்டதாக பொய்யாக குற்றம் சுமத்தப்படுகிறது. எனக்கு வாக்களிக்கும் மக்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள்.

அரசியலில் பட்டம் பெற்ற நான் வெற்றி பெற முடியாத தேர்தலில் போட்டியிடுவதற்கு முட்டாள் அல்ல. காரணம் இன்றி குதிக்கவில்லை. என்னை யாரும் இயக்கவில்லை. எனது சொந்த நிதியிலேயே தேர்தல் செலவுகளை மேற்கொண்டு வருகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியின் போது ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஒரே வரு­டத்தில் 3 புதல்­வர்­களின் திரு­மணம்: மஹிந்­த­விற்கு நிதி எங்­கி­ருந்து வரு­கி­றது?

ஒரே வரு­டத்தில் 3 புதல்­வர்­களின் திரு­மணம்: மஹிந்­த­விற்கு நிதி எங்­கி­ருந்து வரு­கி­றது?

மஹிந்த ராஜ­பக் ஷ குடும்பம் முன்­னெப்­போதும் எவ்­வித வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்ட ­தில்லை. ஆனால் ஒரே வரு­டத்தில் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் மூன்று புதல்­வர்­களின் திரு­மண நிகழ்வை விம­ரி­சை­யாக நடத்­து­வ­தற்கும், தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் பெரு­ம­ளவு நிதி எங்­கி­ருந்து பெறப்­ப­டு­கி­றது என்று சர்­வ­தேச வர்த்­தக இரா­ஜாங்க அமைச்சர் சுஜீவ சேன­சிங்க கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது:
இவ்­வ­ரு­டத்­தி­லேயே நாங்கள் கட­னுக்­கான மிக அதிக வட்­டியைச் செலுத்திக் கொண்­டி­ருக்­கிறோம். அவ்­வாறு செலுத்த வேண்­டிய தொகையை எதிர்­வரும் 5 வரு­டங்­களில் 5 ட்ரில்­லியன் ரூபா வரையில் குறைத்­துக்­கொள்­வ­தற்கு எம்மால் இய­லு­மாக இருக்கும். நாங்கள் கடன்­களைப் பெற்று, அவற்றின் மூலம் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தில்லை. மாறாக அரச – தனியார் பங்­காண்­மையின் ஊடாக தனியார் துறை­யி­னரின் முத­லீ­டு­க­ளைப்­பெற்று அபி­வி­ருத்தித் திட்­டங்­களை செயற்­ப­டுத்தி வரு­கின்றோம்.
எனவே ஒரு­வேளை கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆட்­சி­ய­மைத்தால் அவ­ரிடம் கேட்­ப­தற்கு ஒரு கேள்வி இருக்­கின்­றது. மஹிந்த ராஜ­பக்ஷ குடும்பம் முன்­னெப்­போதும் எவ்­வித வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்­ட­தில்லை. ஆனால் ஒரே வரு­டத்தில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மூன்று புதல்­வர்­களின் திரு­மண நிகழ்வை விம­ரி­சை­யாக நடத்­து­வ­தற்கும், தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் பெரு­ம­ளவு நிதியை எங்­கி­ருந்து பெற்­றுக்­கொள்­கின்­றார்கள் என்று தெரி­ய­வில்லை. அதுவே இன்று ஒட்­டு­மொத்த நாட்­டி­னதும் கேள்­வி­யாக இருக்­கின்­றது. அத்­தோடு குறித்­த­ளவு நிதி நாட்­டி­லி­ருந்து காணாமல் போயி­ருக்­கி­றது என்று தகவல் கிடைத்­தி­ருக்­கி­றது.
அவ்­வா­றெனின் அவர்­களை ஏன் சிறையில் அடைக்­க­வில்லை என்று நீங்கள் எம்­மிடம் கேட்­கலாம். காமினி திஸா­நா­யக்க, லலித் அது­லத்­மு­தலி, ரண­சிங்க பிரே­ம­தாஸ போன்றோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். ஆனால் அச்­சம்­ப­வங்கள் தொடர்பில் ஒரு­வ­ரை­யேனும் விசா­ரணை செய்து சிறையில் அடைப்­ப­தற்கு இய­லு­மாக இருந்­ததா? உலகில் முகாபே, கடாபி, இடி­அமீன் போன்­ற­வர்­களை உதா­ர­ண­மாகக் கூறலாம். அண்­மையில் உயி­ரி­ழந்த முகாபே ஊழல்­மோ­ச­டியில் ஈடு­பட்டு, சேர்த்த நிதி தொடர்பில் முழு உல­கிற்கும் தெரியும். ஆனால் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்­யவோ அல்­லது சிறையில் அடைக்­கவோ முடி­ய­வில்லை.
அதே­போன்று ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவை மஹிந்த ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் தான் படு­கொலை செய்­தார்கள் என்று கூற­வில்லை. ஆனால் காரண காரி­யங்­களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மஹிந்த ராஜ­பக்ஷ குடும்­பத்தைச் சேர்ந்த ஒரு­வரின் மிக் விமானக் கொள்­வ­னவு மோசடி தொடர்­பான தக­வல்கள்  பல­வற்றை வெளி­யி­டு­வ­தற்கு லசந்த விக்­கி­ர­ம­துங்க திட்­ட­மிட்­டி­ருந்தார். வசீம் தாஜுதீன் றகர் விளை­யாட்டில் ஏற்­பட்ட சில முரண்­பா­டுகள் கார­ண­மாக படு­கொலை செய்­யப்­பட்டார். இவை தொடர்பில் நாட்டு மக்கள் கேள்­வி­யெ­ழுப்ப வேண்டும்.
நாம் நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஸ்தாபித்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு முழு­மை­யான சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்தோம். அவர்கள் விரும்­பி­யதை எழு­து­வ­தற்கும், கேள்வி கேட்­ப­தற்கும் வாய்ப்­பி­ருந்­தது. ஆனால் மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பு கடந்த காலத்தைப் போன்றே பல்வேறு வன்முறைகள் நிறைந்த ஒரு குடும்ப ஆட்சிக்குள்ளேயே நாட்டை மீண்டும் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றது.

எனவே ஏற்கனவே அடைந்து கொண்டிருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதா அல்லது மீண்டும் இருண்ட யுகத்திற்குள் செல்வதா என்ற தீர்மானத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
ஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..!: இரா.சம்பந்தன்

ஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..!: இரா.சம்பந்தன்

ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாஸ, கோத்­தா­பய ராஜ­பக் ஷ அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாம் தயா­ரா­கவே உள்ளோம்  என  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறி­வித்­துள்ளார்.

வேட்பு மனுத்­தாக்­கல்கள் நிறைவு செய்­யப்­பட்டு பிர­சா­ரங்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­ போதும் இது­வ­ரையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும், கொள்­கைத்­திட்ட வெளி­யீ­டு­களும் இடம்­பெ­றாத நிலையில் அவ­ச­ர­மான தீர்­மா­னங்­களை கூட்­ட­மைப்பு எடுக்­காது எனச் சுட்­டிக்­காட்­டிய சம்­பந்தன் கள­மி­றங்­கிய வேட்­பா­ளர்கள் யாரும் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்­கு­ரிய உத்­தி­யோக பூர்­வ­மான அணு­கு­மு­றை­களை இது­வரை மேற்­கொள்­ள­வில்லை என்றும் குறிப்­பிட்டார்.  
ஜனா­தி­பதித் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இறு­தித்­தீர்­மானம் எப்­போது அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது என்­பது தொடர்பில் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 
இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, 
ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்ட நிலையில் தேசிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­கின்ற சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் அவர் பெய­ரி­டப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக சந்­தித்­தி­ருந்தோம். அதன் பின்னர் பிர­த­ம­ருடன் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­தோடு சஜித் தரப்பின் குழு­வி­னரும் சந்­தித்­தி­ருந்­தனர். 
அதே­போன்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ள முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னுடன் தொலை­பே­சியில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இவை அனைத்­துமே உத்­தி­யோகப் பற்­றற்ற முறையில் தான் நடந்­தே­றி­யுள்­ளன. இந்தச் சந்­திப்­புக்­களின் போது தீர்க்­க­மான முடி­வுகள் எவையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. 
இதன்­பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுவும், ஒருங்­கி­ணைப்புக் குழுவும் ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து கூடி ஆராய்ந்­தி­ருந்­தது. இதன்­போது பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் நாம் அவ­தா­னங்­களை செலுத்­தி­யி­ருந்தோம். தமிழ் மக்­களின் நியா­ய­மான விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தியே எமது இறு­தி­யான தீர்­மா­னங்­களை எடுப்­ப­தென்­பதில் உறு­தி­யான நிலைப்­பாட்டில் உள்ளோம். 
தற்­போ­தைய நிலையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் தங்­களின் வேட்பு மனுக்­களை தாக்கல் செய்­துள்­ளனர். தமது பிர­சா­ரங்­க­ளையும் மெது­வாக ஆரம்­பித்­துள்­ளனர். ஆனால் எந்­த­வொரு தரப்­பி­னரும் இது­வ­ரையில் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தி­னையோ அல்­லது கொள்­கைத்­திட்­டத்­தி­னையோ வெளிப்­ப­டுத்­த­வில்லை. 
ஆகவே எடுத்த எடுப்பில் நாம் முடி­வு­களை எடுக்க முடி­யாது. இந்த விட­யத்தில் பொறு­மை­யு­டனும், நிதா­ன­மா­கவும் தீர்­மா­னிப்­ப­தற்கே தலைப்­பட்­டி­ருக்­கின்றோம்.
அந்த வகையில் தேர்தல் விஞ்­ஞா­பனம் மற்றும் கொள்­கைத்­திட்­டங்­களை வெளி­யிட்ட பின்னர் அவற்­றையும் நாம் கவ­னத்தில் கொண்டு ஆரா­ய­வுள்ளோம். இது­வ­ரையில் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்ள எந்­த­வொரு வேட்­பா­ளர்­களும் எம்­முடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு உத்­தி­யோக ப+ர்வமான அழைப்­புக்­க­ளையோ அறி­விப்­புக்­க­ளையோ மேற்­கொள்­ள­வில்லை. 
நாம் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டு­க­ளுடன் சஜித் பிரே­ம­தா­ஸ­வு­டனோ, கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வு­டனோ, அநு­ர­கு­மார திஸா­நா­யக்­க­வு­டனோ ஏனைய தரப்­பி­ன­ரு­டனோ பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம் என்றார். 
இதே­வேளை, ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டத்தில் நிபந்­த­னை­களை விதிப்­பீர்­களா? எழுத்­து­மூ­ல­மான வாக்குறுதிகளை பெறுவதற்கு முயல்வீர்களா என்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன், 
எமது நிபந்தனைகள் எமது மக்களினை அடிப்படையாகவே கொண்டிருக்கும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால், அதுபற்றி தற்போது எவ்விதமான இறுதி முடிவுகளையும் எடுத்திருக்கவில்லை. எழுத்துமூலமாக நிபந்தனைகளைப் பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை கூட்டமைப்பாக கூடியாராய்ந்து யதார்த்த பூர்வமாக கையாள்வதற்கே முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார்.
32 கோரிக்கைகளுடன் கோத்தாவை ஆதரித்த ஆறுமுகன் தொண்டமான்..!

32 கோரிக்கைகளுடன் கோத்தாவை ஆதரித்த ஆறுமுகன் தொண்டமான்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (13.10.2019) காலை 9.30 மணியளவில், கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக தீர்மானிக்கப்பட்டது.
மேலும், 32 கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி தீர்மானம் எட்டபட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றியின் பின்னர் இடம்பெற்ற தேர்தலில் கூட எல்பிடியவில் UNP படுதோல்வியடையவில்லை ..

யுத்த வெற்றியின் பின்னர் இடம்பெற்ற தேர்தலில் கூட எல்பிடியவில் UNP படுதோல்வியடையவில்லை ..

யுத்த வெற்றியின் பின்னர் 2011 இல்  இடம்பெற்ற  தேர்தலில் கூட எல்பிடியவில் UNP படுதோல்வியடையவில்லை  என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் அவர் மேலும் கூறுகையில்,

சஜித் பிரேமதாசவுக்கு நாட்டில் பாரிய அலை ஒன்று வந்திருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி கூறிவந்த போதும் அந்த அலை கோத்தாபய என்ற பேரலையில் அள்ளுண்டு போயுள்ளது எல்லபிட்டியவில் தெட்டத்தெளிவாகியுள்ளது.

சஜித்தின் வருகையின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி பலம் பெறும் என சஜித் ஆதரவு அணியினர் கூறிவந்தனர். ஆனால் இலங்கை தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் ஐக்கிய தேசிய கட்சி எல்பிடியவில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற  தேர்தலில் கூட ஐக்கிய தேசிய கட்சி 30 சதவீதமான வாக்குகளை பெற்றிருந்தது. கடைசியாக நடந்த பாராளும்னற தேர்தலில் பெந்தர எல்பிடிய தொகுதியில் அக்கட்சி 40 வீதமான வாக்குகளை பெற்றிருந்தது. இருந்தபோதும் எதிர்வரும் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள சூழலில் நடந்த எல்பிடிய தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

எல்பிடியவில் ஒரு வட்டாரத்தைக் கூட வெல்ல முடியாத ஐக்கிய தேசிய கட்சியால் , 25 % வாக்குகள் எடுக்க முடியாத ஐக்கிய தேசிய கட்சியால் எவ்வாறு ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

Saturday, October 12, 2019

ஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்? நாமல் வெளியிட்ட தகவல்

ஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்? நாமல் வெளியிட்ட தகவல்



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஒப்பந்தங்கள் செய்துகொள்வது தேர்தல் சட்டத்தை மீறுவதாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தங்களையும் செய்துகொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா பெற்றுக் கொள்ளும் வாக்குகள் கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைக்கும் வாக்குகளாகும் என எஸ்.பீ. திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோத்தபாயவுக்கு தடை போட்ட மஹிந்த!

கோத்தபாயவுக்கு தடை போட்ட மஹிந்த!

மக்கள் மத்தியில் போலியான உத்தரவாதங்களை முன்வைக்க வேண்டாம் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கப்படும் கொள்கை பிரகடனத்தில் நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளை மாத்திரம் உள்ளடக்குமாறு மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் கொள்கை பிரகடனம் தயாரிக்கும் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் போது மஹிந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைக்கு பொருத்தமான மற்றும் கோத்தபாயவின் எதிர்கால அரசாங்கத்தின் கீழ் தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்ப கூடிய வாக்குறுதிகளை மாத்திரம் உள்ளடக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், பதவியை பொறுப்பேற்றதும் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவத்தினரும் விடுதலை செய்யப்படுவார்கள் என கோத்தபாய தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய கூற்று நாட்டு மக்கள் மத்தியில் வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மஹிந்த கடுமையான உத்தரவு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்!

அவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்!

அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் அரசு மட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், இலங்கை தமிழர்கள் உட்பட தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேறு கடற்பாதையின் வழியாக புதிய தேசமொன்றுக்கு பயணமாகுவது சமீப காலமாக தொடர்கிறது என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு (UNHCR) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்து சமூத்திரத்தில் அமைந்துள்ள மடகஸ்காருக்கும் மொஸாம்பிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள பிரான்ஸிற்கு சொந்தமான La Réunion மற்றும் Mayotte ஆகிய தீவுகளில் படகு மூலம் போய் இறங்கும் இந்த அகதிகள் அங்கு அடைக்கலம் கோருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 291 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இவ்வாறு போயிறங்கியிருப்பதாக UNHCR அமைப்பு இந்த மாதம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அடைக்கலம் கோரும் இந்த அகதிகளின் விண்ணப்பங்கள் பிரஞ்சு தரப்பினரால் கடுமையான முறையில் கையாளப்பட்டு நிராகரிக்கப்பட்டு பெரும்பாலனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இவ்வாறு வந்திறங்கியவர்களின் அகதிக்கோரிக்கை தொடர்பில் மாத்திரம் பிரஞ்சு தரப்பினர் ஓரளவுக்கு நெகிழ்ச்சித்தன்மையை காண்பித்திருக்கிறார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் வரை அங்கு சென்ற இலங்கையை சேர்ந்த சுமார் 120 அகதிகளில் 34 பேர் தஞ்சக்கோரிக்கையை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். 60 பேர் உடனடியாகவே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மூன்று குழந்தைகள் உட்பட மிகுதிப்பேர் இன்னமும் அங்குள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் Réunion தீவில் போயிறங்கிய இலங்கையை சேர்ந்த எழுபது பேரில் ஆறு பேர் மாத்திரமே தஞ்சக்கோரிக்கையை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
பிரஞ்சு குடிவரவுக்கொள்கையின்படி, தஞ்சக்கோரிக்கையை விண்ணப்பிக்க முன்னரே அதனை தடுத்து குறிப்பிட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து சுமார் நாலாயிரம் கிலோமீற்றர் தூரம் படகுகள் மூலம் அகதிகளாக போகின்றவர்களின் இந்த புதிய கடற்பயணம் குறித்து UNHCR கவலையும் கரிசனையும் வெளியிட்டுள்ளது.
20 வீத முஸ்லிம்கள் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்

20 வீத முஸ்லிம்கள் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்

மன்னார் மாவட்டத்தில் சுமார் 20வீதமான முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தெரிவித்தார்.  
மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட வாக்காளர் இடாப்பிலிருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கோரிக்கை கடிதம் ஒன்றை மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.  
கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்டத் தேர்தல் இடாப்பில் பெயர்கள் குறிப்பிடப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 20வருடங்களுக்கு மேலாக வாக்களித்து வந்த சிலரது பெயர்கள் இம்முறை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு வாக்காளர் இடாப்பிலிருந்து பெயர் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணான செயல் என்றும், இதற்கு எதிராக தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்கள் என்னை நாடியுள்ளனர்.   நான் முதற்கட்ட நடவடிக்கையாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளேன். மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 25வீதமான முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.
அதில் சுமார் 20 வீதமான வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளமையானது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மன்னார் குறூப் நிருபர் 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம்கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய ,மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு , நிலம் நிர்வாகம் பொருளாதாரம் நிர்வாகம் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய மீட்கவேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் இன்று இடம்பெற்ற கட்சியின் தலைவர் பணிக்குழு செயற்குழு மற்றும் பொதுச் சபைக் கூட்டத்தின் அடிப்படையில் கட்சியின் தொண்டர்கள் ஆளும் கட்சியின் தலைமை நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

கட்சியினால் மக்களின் வலுவாக்கம். அபிவிருத்தி கல்வி கலை கலாச்சார பொருளாதார ரீதியான தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்துக் கொள்வதற்கு தேவையான உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டு நாங்கள் அவர்களுடன் பேசி வந்த அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் அதற்கான உடன்படிக்கை கைச்சாதிட உள்ளோம்.

ஜனாதிபதி வேட்பாளர் வெளிநாட்டிற்கு சென்ற காரணத்தினால் உடன்படிக்கை செய்ய முடியாமல் உள்ளது இருந்தாலும் அவர்களுடன் பேசிய அடிப்படையில் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் மாகாண சபை ஒட்டுமொத்தமாக இருக்கிற மாகாணசபை அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

அதே போன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற போராளிகள் யுத்தத்தால் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள்.

சீரழிந்து இருக்கின்ற கல்வி கலை கலாசார பொருளாதார நில ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து விடயங்களிலும் உடன்பாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்களின் நன்மைகருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

2008 முதல் 2012 வரை இதே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு இணக்கப்பாடு செய்திருந்தோம் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை ஆட்சியை தமிழர் விடுதலைப் புலிகள் கட்சி செய்துகாட்டி இருந்தது அந்த வேளையில். அதன் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக முடிந்த அளவிற்கு ஒரு இன ஒற்றுமையை மேற்கொண்டு அபிவிருத்தி பணிகளை செய்திருந்தோம்

அந்த அடிப்படையில் நாட்டின் ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். கிழக்கு மாகாணத்திலுள்ள பிரச்சனைகளை தீர்க்க கூடியதாக இருக்கவேண்டும்.

அதைவிடுத்து வெறுமனே நான்கு வருடம் நல்லாட்சி என்ற போர்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதனுடன் இணைத்து கட்சிகளும் கொண்டு வந்த நல்லாட்சியும் ஐக்கிய தேசிய கட்சி அரசும் இதுவரையில் கிழக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வுகண்டிருக்கின்றதா? அது கேள்வி குறியாய் இருக்கிறது

அவர்கள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி நிரந்தர தீர்வு அதனை பெற்றுக்கொடுக்க முடியவில்லை ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தை சீரழித்துள்ளார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை கிரான் பிரதேசத்தின் அபிவிருத்தி குழு தலைவராக 99.99 வீதம் தமிழர்கள் இருக்கும் இங்கு அபிவிருத்தி குழு தலைவராக ஓட்டமாவடியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர்.

ஆகவே அடிப்படை நிர்வாகத்தை கூட தமிழர் அடைக் கூடாது என்பதற்காக அடுத்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்த கோரிக்கை 29 வருடங்களாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனை கரிஸ் எம்.பியிடம் சென்று கேட்டுவாருங்கள் என்று செல்லுமளவிற்கு நிர்வாகம் இருக்கின்றது என்றால் அதற்கு மாற்றீடாக மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து வாழ வைத்தவர் முதலமைச்சர் சந்திரகாந்தன் என்பதை அறியவேண்டும்.

எங்களுடைய நோக்கம் கிழக்கு மாகாண ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து வாழ்வதே. தமிழர்களே கிழக்கு மாகாணத்தை ஆளக்கூடிய சூழல் உருவாக வேண்டும் எனபது தான் எமது நோக்கம் எனவே மக்கள் விரும்பினால் நாங்கள் ஆட்சிகளை பிடித்து அதிகாரங்களை பெற்று சேவை செய்வோம் தலைவர் சந்திரகாந்த் 4 வருடங்களாக சிறைப்படுத்தப்பட்ட போதும் நாங்கள் ஓடி ஒழியாது எமது அடிமட்ட தொண்டர்கள் கூட கிழக்கு மாகாண தமிழர்களை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் கிழக்கு மக்களின் அனைத்து அமைப்புகளும் கிழக்கு மாகாணத்தில் மக்களின் அனைத்து புத்திஜீவிகள் நாங்கள் ஒன்றாக பயணிப்போம். அதேவேளை கிழக்கிற்கு தலைமை தாங்க கூடிய ஒரே ஒருவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் தான் என்றார். .

(மட்டக்களப்பு நிருபர் சரவணன்)
எல்பிட்டிய போன்றே ஜனாதிபதி தேர்தல் முடிவும் இருக்கும்: மஹிந்த

எல்பிட்டிய போன்றே ஜனாதிபதி தேர்தல் முடிவும் இருக்கும்: மஹிந்த

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவு போன்றே நவம்பரில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவும் அமையும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

ல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளையும் பெரமுன வென்றது போன்று நாடு முழுவதும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று தமது வேட்பாளர் வெல்லவுள்ளார் என மஹிந்த விளக்கமளித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனங்கள் நான்கிலிருந்து ஏழாக அதிகரித்துள்ளதுடன் ஜே.வி.பிக்கு முதன்முறையாக இரு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.