ஒருதமிழனாய் சிங்கள தேசிய வாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் வடிவம் புதியது என்பதை உணர்கிறேன். சிங்கள ஆழும் சக்திகள் தமிழருடன் இனரீதியான மோதலிலும் பலப்பரீட்சையிலுமே ஈடுபட்டனர். சலுகைகளை நிராகரித்த, அபிவிருக்திகளை பலி கொடுத்த தமிழர் போராட்டங்கள் சிங்கள ஆழும்சக்திகளுக்கு அதிக தெரிவை கொடுக்கவில்லை.
ஈஸ்ட்டர் தாக்குதலால் நிலைகுலைந்த சிங்கள ஆழும் சக்திகள் அதன் பின்னர் முஸ்லிம்களோடு மோதுகிற வடிவம் வேறு என்பது புலனாகிறது. 1960பதுகளின் முன்னம் அமரிக்க நிறவாதா ஆதிக்கம் கறுப்பர்கள் மீது கட்டவிழ்த்த வெறுப்பு அரசியலின் அம்சங்கள் தெளிவாக இருக்கு. சிங்கள ஆழும் சக்திகளின் தமிழருடனான மோதல் போல முஸ்லிம்களுடனான மோதல் எனக்கு ஓமர் முத்தார் Omar Mukhtar போன்ற படங்களை நினைவு படுத்தவில்லை. மிசிசிப்பி எரிகிறது Mississippi Burning (1988) படத்தைத்தான் நினைவு படுத்துகிறது. இது மிகவும் பரிதாபகரமான நிலமையாகும். பெண்களை இலக்காக்குவது வெறுப்பு அரசியலின் மிக மோசமான வடிவமாகும். அது மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயலாகும்.
சிங்கள பேரினவாதிகளின் தமிழருடனான பலபரீட்ச்சை மோதல் அரசியலுக்கும் முஸ்லிம்களுடனான -1960 களின் அமரிக்க நிறவாதிகளின் மோதல்போன்ற - வெறுப்பு அரசியல் மோதல் வடிவத்துக்கும் இடையில் அமைப்பு ரீதியான அடிப்படை வேறுபாடுகள் உள்ளது. தமிழருடன் இனப் பலபரிட்ச்சை இது நவ பாசிச தன்மையுள்ள இனவாத வெறுப்பு. சிங்கள தேசிய வாதத்தின் ஆபத்தான புதிய வளர்ச்சியை அதன் அரசியலை சர்வதேச ரீயாக அம்மணமாக்கவேண்டும்

0 comments: