இலங்கைக்கான குவைட் தூதரகம் உள்ளிட்ட டொட் எல்.கே மற்றும் டொட். கொம் ஆகிய முகவரிகளைக் கொண்ட 11 இணையத்தளங்கள் மீது இன்று இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
தற்போது இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு குறித்த இணையத்தளங்கள் வழமைக்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளங்களின் தகவலை திரிபுப்படுத்தி இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு அனுமதியின்றி பிரவேசித்து தாக்குதலுக்கு உள்ளான இணைத்தளங்களுள், தனியார் நிறுவனங்கள், ரஜரட்ட பல்கலைக்கழக இணையத்தளம் மற்றும் தேயிலை ஆராச்சி நிலையத்தின் இணையத்தளம் என்பனவும் உள்ளடங்குகின்றன.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இவ்வாறான தாக்குதல் கடந்த வருடம் மே மாதம் 18ம் திகதியும் நடத்தப்பட்டிருந்ததாக, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments: