Sunday, May 5, 2019

இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..?


ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று மாலை 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே சபரகமுவ தென் மற்றும் மேல் மாகாணங்களில் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பொழியும் போது குறித்த பிரதேசத்தில் தற்காலிகமாக கடும் காற்று வீச கூடும் என்பதுடன்,  மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Author: verified_user

0 comments: