Wednesday, May 8, 2019

மகிந்த பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை!


நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கோரியிருந்த விவாதத்தை மூன்றாவது நாளாகவும் நடாத்த இன்று நாடாளுமன்றில் அனுமதி கிடைத்தது.

அதன்படி , ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர், நாளைய தினமும் இந்த விவாதத்தை நடத்த ஒருமனதாக தீர்மானித்தனர்.

இதேவேளை , நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் விரிவான ஆய்வொன்றிற்கும் மற்றும் விசாரணைக்கும் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ , பிரதமரிடம் கோரியிருந்தார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் , அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த தயார் என தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: