Tuesday, October 15, 2019

வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய

வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று -15- ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது கோத்தாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நான் ஜனாதிபதியானால் அங்கீகரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்லவெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை மையப்படுத்தியே ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவளிக்கின்றார் எனவும் இதன்போது தெரிவித்தார் கோத்தாபய ராஜபக்ஷ.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம் எனவும்  இராணுவத்திற்கு தான் தலைமைதாங்கவில்லையெனவும் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இதன் போது ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றவுடன் பிரதமர் பதவி மாறும் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 19 ஆவது அரசியலமைப்பே கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்க காரணம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! சற்று முன் அறிவிப்பு..!

தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! சற்று முன் அறிவிப்பு..!


இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர் அமைச்சர் திகாம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தொகையை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்று வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, October 13, 2019

வறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...!

வறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...!



“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்டு குடிவந்தோம்.

எனது தந்தை நில அளவை ஊழியர். அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது. இரவு நேரம் படிப்பதற்காக தபால் கந்தோருக்கு வருவோம். மின் விளக்கொளியில் படிப்பதற்கு இருந்த இடம், இந்த தபால் கத்தோர்தான்.

விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் விளாம்பழம் விற்போம். எனது அக்காவும் அம்மாவும் இந்த கூட்டத்துக்கு வந்திருக்குறாங்க. அக்காவின் கையில் தீக் காயத்தின் தழும்பு இருக்கும். அது கூலிக்கு பனியாரம் சமைக்கும்போது ஏற்பட்ட தீக் காயம்.

அன்று தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒரு தமிழ் ஐயா. எனது தந்தை வேலை செய்த நில அளவை அலுவலகத்தின் பிரதானி ஒரு தமிழ் ஐயா. தம்புத்தேகம புகையிரத நிலைய அதிகாரியும் ஒரு தமிழ் ஐயா. நாங்கள் அவர்களோடு நெருக்கமாக வாழ்ந்தோம். ஆனால் ஆட்சியாளர்கள் எங்களுக்கிடையில் ஒரு யுத்தத்தைச் சுமத்தி அவை அனைத்தையும் இல்லாமலாக்கினார்கள். எங்களோடு நெருக்கமாக வாழ்ந்த பலரை நாங்கள் இழந்திருக்கின்றோம். அந்த வேதனையையும் வலியையும் நாங்கள் அறிவோம்.

ஏழ்மையின் வெறுமையை நன்கு அறிந்தவர்கள் நாங்கள். குடியிருக்க உருப்படியான வீடு இல்லையென்றால், பிள்ளைகளுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லையென்றால், ஒழுங்கான சுகாதார சேவை இல்லையென்றால், மனதுக்கு ஓய்வு இல்லையென்றால், அந்த இடத்தில் நாம் வாழத்தான் வேண்டுமா?

கடந்த 71 வருடங்களாக, எனது பெற்றாரும்தான், பிழையான அரசியலொன்றை தெரிவுசெய்திருந்தார்கள். ஆயிரம் எதிர்பார்ப்புக்களுடன் ஓர் அரசியல் கட்சிக்கு அவர்கள் வாக்களித்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் எதனையும் அவர்களால் நிறைவுசெய்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

நாம் உங்கள் மக்கள். மக்களின் பிரதிநிதிகள். இனியும் நீங்கள் எங்களைப் புறக்கணிப்பது நியாயமாகாது. அந்த வெற்றிடங்களை நிறைவுசெய்யும் நோக்கோடு உங்களுக்காக, இந்த நாட்டுக்காக, நாட்டின் எதிர்காலத்துக்காக ஜனாதிபதி தேர்தலுக்கு வந்திருக்கின்றோம்.

71 வருடங்களாக கிடைக்காத சந்தோஷத்தையும் நிம்மதியையும் பெற்றுக்கொள்ளும் பாதையொன்றை திறந்து தருவோம்”

____________________________________
2019.10.08 ஆம் திகதி தனது சொந்த ஊரான தம்புத்தேகமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக ஆற்றிய உரையில் இருந்து
கத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

கத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

கத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தியிருப்பதை அவதானித்திருக்கக் கூடும். இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு சமூக வலைதளங்கள் ஊடாக வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

வாகனங்கள் ஒன்றையொன்டு முந்திக் கொண்டு செல்ல முற்படுவதனால் இது போன்ற வாகன நெரிசல் ஏற்பட்டு, yellow boxes களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. ஆகவே வாகன ஓட்டுநர்கள் இதனைத் தவிர்ந்து கொள்ளும் படி கோட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்த போக்குவரத்து குற்றத்துக்கு 500 றியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து போலிஸார் இது போன்ற வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான அதிகாரங்களையும் கொண்டுள்ளனர் என்பதாக போக்குவரத்து துறை உயர் அதிகாரி Brigadier Mohammed Saad Al Kharji, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் - ஹக்கீம்

ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் - ஹக்கீம்

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். 
இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்ப வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் வேட்பாளரை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் எடுக்கும் சதித்திட்டமாகும் என்றும் அவர் கூறினார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா போட்டியிட தீர்மானம் எடுத்துள்ள நிலையில் முஸ்லிம் தலைமைகளின் கருத்து குறித்து தெரிவிக்கையில் அவர் இவற்றைக் கூறினார். 
போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு அதிமேதகு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வீதி பயணத்தின் போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச்சீட்டு  வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைச்சீட்டில் தண்டனைகள் என்ன ஏது என்பது தொடர்பில் சிங்கள மொழியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன.

 வடமகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் இதுதொடர்பில் தமக்கு தெளிவின்மை காணப்படுவதாகவும் இதனை மாற்றியமைத்து தமிழில் அவை வழங்கப்படவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறித்த தண்டனைச்சீட்டில்  மூன்று மொழிகளிலும் தண்டனைகள் என்ன என்பது தொடர்பில் குறிப்பிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறாக தண்டனைச்சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைப்பட்டியலில் இலகுவில் அறிந்துகொள்ளமுடியும் .
 போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலினை தொடர்ந்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சு.கவின் தலைமைப்பதவியை துறந்த மைத்திரி பிறப்பித்துள்ள கடும் உத்தரவு

சு.கவின் தலைமைப்பதவியை துறந்த மைத்திரி பிறப்பித்துள்ள கடும் உத்தரவு

சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியைத் துறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் தலைமையகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக, கட்சியின் தலைமையகத்தின் பாதுகாப்பிற்காக ஜனாதிபதி பாதுகாப்பு பரிவினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது கட்சியின் தலைமைப்பதிவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரி விலகியுள்ள நிலையில் அப்பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற விடயம் அவருடைய கவனத்திற்கு தலைமையகத்தில் கடமையாற்றும் முக்கிஸ்தர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சமயத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினைச் சேர்ந்தவர்களே தலைமையகத்தின் பாதுகாப்பு கடமையில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும், தன்னுடைய அனுமதியின்றி தலைமையக பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு விடயத்திலும் முடிவுகளை எடுக்கவேண்டாம் என்றும் கடுமையான உத்தரவினை அலுவலகத்தில் கடமையாற்றும் முக்கிஸ்தர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.
மாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா? அப்ப இத செய்யுங்க…!

மாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா? அப்ப இத செய்யுங்க…!

தற்போது உயர் இரத்த அழுத்தம் பொதுவான பிரச்சனையாக உள்ளது. நிபுணர்களின் படி, ஒருவரது இரத்த அழுத்தத்தை சோதிக்கும் போது, 140/90 ஆக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாக கருதப்படுகிறது. அதாவது ஒருவரது இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக நீண்ட நேரம் அதிகமாக இருந்தால், அது தான் உயர் இரத்த அழுத்தமாகும். இந்த பிரச்சனையைக் கவனித்து ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பல தீவிரமான பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது, உணவில் அதிகமாக உப்பை சேர்ப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது போன்றவைகள் தான். உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடியது. ஏனெனில் இந்த பிரச்சனைக்கான அறிகுறிகளானது அன்றாடம் நாம் சந்திக்கும் உடல் உபாதைகளாக இருக்கும்

மேலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை இன்று இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கங்களே முக்கிய காரணமாகும். இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. சரி, இப்போது அந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கான அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தை மாத்திரைகளைக் கொண்டு சரிசெய்யலாம். ஆனால் அதே சமயம் இயற்கையாகவும் சரிசெய்ய முடியும் என்பதை மறக்க வேண்டாம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக சரிசெய்யும் சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்.
மக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கு மக்னீசியம் மிகவும் முக்கியமான சத்தாகும். மக்னீசியம் இரத்த நாளங்களை விரியச் செய்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மக்னீசியம் சப்ளிமெண்ட்டுகள் அல்லது மக்னீசியம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து 2 வாரங்கள் உட்கொண்டு வந்தால், சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காணலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
வாழைப்பழம் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், சோடியத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளில் இருந்து நிவாரணம் அளித்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும் இந்த கனிமச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்துடன், பொட்டாசியம் நிறைந்த இதர உணவுப் பொருட்களான ஆப்ரிகாட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளையும் சாப்பிடுவது நல்லது.
எலுமிச்சை ஜூஸ் எலுமிச்சை ஜூஸ் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதை பல கட்டுரைகளில் பார்த்துள்ளோம். இந்த எலுமிச்சை ஜூஸை ஒருவர் தினமும் ஒரு டம்ளர் குடித்து வருவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதிலும் எலுமிச்சை ஜூஸை காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் குடிப்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் எலுமிச்சை ஜூஸ் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, உடலை வறட்சியடையாமல் பாதுகாக்கும். மேலும் இது தமனிகளின் சுவர்களுக்கு நன்மையை வழங்கும்.
இந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு!

இந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு!

கத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது. மேற்படி குழந்தைகளுக்கான போர்வை சரியான முறைமையைப் பேணப்படாமல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளமையால் குழந்தைகளுக்கு அசௌகரியம் ஏற்படும் என்பது தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவற்றைக் கொள்வனவு செய்தவர்கள் IKEA (மேற்படி பொருட்கள் IKEA வின் உற்பத்திகளாகும்) விற்கு சென்று மீள ஒப்படைத்து பணங்களைப் பெற்றுக்கொள்ள அல்லது மாற்றீடாக வேறு பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக அமைச்சு மேலும் தெளிவு படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் நலனில் கத்தார் என்றுமே அக்கரை கொண்டுள்ளது. அதனால் தான் அடிக்கடி இது போன்ற பரிசோதனைகள் இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
UNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..?

UNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..?


காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல வாத பிரதிவாதங்கள் நடந்தேறி வருகின்றது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது உண்மைத் தகவல், ணையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

அதாவது,

காலிமுகத்திடலில் சஜித் ஆதரவு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், மற்றும் மனோ கணேசன் ஆகியோருக்கு தலா 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் மேற் குறிப்பிட்ட 3 அமைச்சர்களில் ஒருவருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது ஒரு அரசியல் தரப்பின் ஆதரவாளர்கள் சிலர் குறித்த கூட்டத்தில் சிறுபான்மை அமைச்சர் ஒருவர் உரையாற்றும் போது கூச்சலிட்டு, குழப்புவதுடன் இதன்போது ஹிரு தொலைக்காட்சி அதனை விசேட படமாக்கவும் திட்டமிட்டிருந்துள்ளது.

இதனையடுத்தே 3 அமைச்சர்களும் மேடையில் வைத்தே கலந்துரையாடி, தாம் மூவரும் இந்த கூட்டத்தில் உரையாற்றுவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

இதுவே நடந்த உண்மைச் சம்பவமாகும்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக இடம்பெறும் நிதிமோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் நடவடிக்கை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சந்தேகநபர்கள் சமூக வலைத்தளங்களூடாக, நண்பர்களாக இணைந்துகொண்டு, நம்பிக்கையை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெவ்வேறு நாடுகளில் சீட்டிழுப்பில் வெற்றிபெற்றுள்ளதாக அல்லது பரிசுகள் வெற்றிகொண்டுள்ளதாகத் தெரிவித்து, அவை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர்கள் பொய்யுரைப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெற்றிகொண்ட பரிசுப் பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொள்வதற்கு பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்து, சந்தேகநபர்கள் தமது வங்கிக் கணக்குகளுக்கு மக்களிடமிருந்து பணத்தை வைப்பிலிட்டுக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு பணம் அல்லது பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பணத்தை வைப்பிலிடுவதாயின், பொறுப்பு வாய்ந்த நிறுவனத்திடம் கேட்டறிந்து கொள்ளுமாறு பொலிஸார், மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
சிலோன் தவ்ஹீத் ஜமாத்தின், ஆதரவு கோதாபாயவுக்கா...?

சிலோன் தவ்ஹீத் ஜமாத்தின், ஆதரவு கோதாபாயவுக்கா...?

சூடுபிடித்துள்ள தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அரசியலில் ஆளாளுக்குக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதையும், விமர்சனக் கணைகளை அள்ளி வீசுவதையும், தத்தமது ஆதரவுகளை ஒவ்வொரு சாராருக்கும் தெரிவிப்பதையும் அன்றாடம் கண்டு வருகின்றோம்.
அது அவரவர்களுடைய தேர்வு, மற்றும் கருத்துச் சுதந்திரங்களாகும்.
அதில் முஸ்லிம்களும் முத்தரப்பையும் ஆதரிப்பவர்களாக பிரிந்து கிடந்து அரசியல் பேசுவதையும் , ஆதரவுகளைத் தெரிவிப்பதையும் அவதானிக்கக் கிடைக்கின்றது. அதுவும் ஒவ்வொரு தனிநபர் சுதந்திரமெனலாம்.

ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் , முஸ்லி சமூகத்தின் வாக்குகளின் வகிபங்கென்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.

காரணம், தற்போதைய நல்லாட்சி(?) யிலும் சரி, இதற்கு முந்தைய பொல்லாட்சியிலும் சரி , முஸ்லிம் சமூகம் பலவிதமான இனவாத செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டு , பல்வேறு இழப்புக்களையும் சந்தித்து நிர்க்கதியாக்கப்பட்டிருந்தது என்பது மறக்கவோ மறைக்கவோ முடியாத கசப்பான உண்மைகளாகும்.

இப்படியான அசாதாரண சூழ்நிலையில் எதிர்நோக்கியிருக்கும் ஜனாதிபதித் தேர்தலானது முஸ்லிம் சமூகத்திற்கு மிக முக்கியமானதொரு தருணமாகும். எமது இருப்பையும், பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சிறந்த தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தேவையும் காலத்தின் இன்றியமையாக் கட்டாயக் கடமையாகும்.

ஓட்டுக்களை நரித்தனமாக சூறையாடுவதற்கான சதித்திட்டங்கள் ஆங்காங்கே நாசூக்காக அமுல் படுத்தப்படுகிறன. ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாக்குகளும் ஒருமுகப்படுத்தப் பட்டு ஓர் பேரம் பேசும் அரசியலை உண்டாக்குவதற்கான முயற்சியே சமூக மன்றத்தில் மேற்கொள்ளப் பட வேண்டும். அதற்காகன அறிவுறுத்தல்களே மக்களைச் சென்றடைய வேண்டிய தேவையுள்ளது. அதை முஸ்லிம் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் ஒன்று கூடி தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

யார் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் இருக்க வேண்டும். தங்களையும், தங்களது உடமைகளையும், பதவியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மேற்படி தேர்தலில் மக்களது வாக்குகளை வீணாக்கிவிடாமல், சிறந்த தீர்மானங்களையும், திட்டங்களையும், உடன்படிக்கைகளையும் சமூகத் தலைவர்கள் கண்டிப்பாக மேற்கொண்டாக வேண்டும். அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் அனைவருக்கும் இது தார்மீகப் பொறுப்பாகும்.

இவ்வாறான ஒரு சூழலில் குறிப்பாக நேற்றைய தினத்திலிருந்து CEYLON THAWHEEDH JAMATH (CTJ) இன் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் அவர்களது பெயரால் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது, "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 
CEYLON THAWHEEDH JAMATH (CTJ) இன் ஆதரவு கோதாபாய ராஜபக்ஷ அவர்களுக்கே" என்று சகோதரர் அப்துல் ராஸிக் அவர்கள் தெரிவித்ததாக ஒரு பொய்யான திரிவுபடுத்தப் பட்ட தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

இதன் உண்மை நிலை என்ன?

கீழே பதிவிடப்பட்டுள்ள லிங்கில் சகோதரர் அப்துல் ராஸிக் அவர்கள் குறிப்பிட்ட ஒரு கருத்தையே திரிவுபடுத்தி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் அவர் என்ன குறிப்பிட்டுள்ளார் ? என்பதை நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

"நாட்டின் தேசிய பாதுகாப்பையும் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுக்கும் நபருக்கே முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் சரியே. இந்த கோரிக்கைகளுக்கு எந்த வேட்பாளர் உடன்படுகிறாரோ, எழுத்தில் ஒப்பந்தம் செய்கிறாரோ அவருக்கே நம் வாக்குகள் சென்றடைய வேண்டும். கட்சி அரசியல் செய்யும் காலம் அல்ல இது. சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யப்பட வேண்டிய தருணம் இது” என்றே அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை கூறுகிறார்.

“அவர் யார் என்பதை முஸ்லிம் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்பதே நம் நிலைபாடு" என்றும் இறுதியில் தெளிவாக தம் முடிவையும் குறிப்பிட்டுள்ளார்.

https://youtu.be/e9_838cJh9w

👆👆👆

எதற்காக இந்த அரசியல் நாடகம்?
================================
🔴அவதூறுகளை அள்ளி விட்டு கருத்தாடல்களையும் இறுதி முடிவையும் கவனிக்காமல் பொய்யான செய்திகளை மக்கள் மயப்படுத்தி சிலோன் தெளஹீத் ஜமாஅத்தும் அரசியல் செய்யும் ஜமாஅத் என்பதைப்போல் காட்ட முனைவது.

🔴இதன் மூலம் ஜமாஅத்தை நம்பியிருக்கும் மக்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கையை ஜமாஅத் மீது உண்டாக்குவது.

🔴சகோதரர் அப்துல் ராசிக் கோத்தாப்பாயவுடைய ஆதரவாளர் என்று காட்ட முனைவது, அல்லது எதிரியாக்கத் திட்டமிடுவது.

🔴மக்களுடைய சிந்தனைகளைத் திசைதிருப்புவது.

போன்ற பல காரணங்களைக் குறிப்பிடலாம்.

இத்தகைய அவதூறான தகவல்களைப் புனைந்து பரப்பும் கள்ளப் பேர்வழிகளையும், இதன் உண்மைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் அப்படியே அந்தத் தகவல்களைப் பரப்பும் தவறைச் செய்பவர்களையும் எச்சரிக்கின்றோம்.

ஏதோ ஒரு உள்நோக்கத்தில் எவனோ ஒரு பாவி இவ்வாறு தகவல் பரிமாறுகிறான். மக்களை திசை திருப்புகிறான்.

ஒரு தகவலைக் கொண்டுவந்தால் முதலாவது , முஸ்லிம்கள் அது குறித்த தெளிவைப் பெற்ற பின்பே பரப்புவதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர வேண்டும். இதுவே திருமறையின் அறிவுரை.

‎يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 49:6

எனவே குறித்த சகோதரர் அப்துல் ராசிக் அவர்களது பெயரால் ஒரு செய்தி பரப்பப்பட்டுக் கொண்டிக்கின்றதென்றால் அது பொய்யானது என்பதைப் புரிந்து மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தோ சகோதரர் அப்துல் ராசிக் அவர்களோ அரசியல் களத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் பணியாற்றுபவர்கள் அல்ல என்பதை இதன் மூலம் அறிவித்து கொள்கிறோம்.

ஏ. எல். எம். ரிஸான்
தலைவர்
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்