தெஹிவளையில் உள்ள ஹார்ட்வெயார் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர், அதன் உரிமையாளரிடம் கப்பம் கேட்டபோது அதனை வழங்க மறுத்ததால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான அப்துல் அசீஸ் (60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது அவர் தனியாகவே வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

0 comments: