Wednesday, May 29, 2019

UAE பிரஜைகள் விடுமுறைக்காக இலங்கைக்கு செல்லவேண்டாம் என அவசர அறிவிப்பு!

றமழான் விடுமுறை காலங்களில் இலங்கைக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய வௌிவிவகார மற்றும் சர்வதேச உறவுகள் அமைச்சு தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்கினூடாக தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்திற்கு +94 112-301-601 அல்லது அமைச்சின் 800-444-44 என்ற எண்ணுடன் இலவசமாக தொடர்புகொண்டு தகவல்களை அறிந்துகொள்ளலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்புவதற்கான UAE அரசாங்கத்தின் Twajudi சேவையில் பதிவு செய்யுமாறும் தனது பிரஜைகளுக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: