Wednesday, May 29, 2019

பெண்கள் உட்பட ஐவர் காயம்...

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் நேற்று இரவு, வீடொன்றுக்குள்  வீடு புகுந்து, வாள் வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அத்துடன், குறித்த வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை குறித்த குழுவினர்  களவாடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: