Monday, May 13, 2019

மறு அறிவித்தல் வரை, வட மேல் மாணத்திற்கு போலீஸ் ஊரடங்கு அமுல்.

மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
.
இதேவேளை, குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று பிறப்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து கொபேகனே மற்றும் ரஸ்நாயக்கபுர பகுதிகளுக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்த மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: