எம்.முபாறக் மற்றும் எம்.எஸ்.எம். இப்றாகீம் ஆகியோருக்கு சொந்தமான மர ஆலைகளே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இம்மர ஆலைகள் இரண்டும் அருகருகே உள்ளன. இதில் ஒரு மர ஆலை தீப்பற்றியுள்ளது. இத்தீ அருகிலுள்ள மற்றைய மர ஆலையிலும் பிடித்து இரண்டு மர ஆலைகளும் எரிந்துள்ளதுடன் அங்கிருந்த பெறுமதியான முதிரை மற்றும் தேக்கு உட்பட பல மரங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.
குறித்த சம்பவத்தின் காரணமாக இரண்டு கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தின்போது மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் இயந்திரம் கல்முனை மாநகர சபையின் தீ அணைக்கும் இயந்திரம், உடனடியாக வரவழைக்கப்பட்டு காத்தான்குடி பொலிசார் மற்றும் இராணுவத்தினர், மட்டக்களப்பு மாநகர சபை, கல்முனை மாநகர சபைகளின் தீயணைக்கும் ஊழியர்கள் மற்றும் அங்கு ஒன்று திரண்ட பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மெற் கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
புனித றமழான் மாதத்தின் முதல் நோன்பு நோற்பதற்காக அதிகாலை மக்கள் தயாரான போது இந்த மர ஆலைகளின் தீச் சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் பெருமளவிலான பொது மக்கள் அங்கு ஒன்று திரண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாநகர மேயர் ரி. சரவணபவன் இங்கு வருகை தந்து அந்த இடங்களை பார்வையிட்டார்.
(புதிய காத்தான்குடி தினகர நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)




0 comments: