Tuesday, May 7, 2019

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை!

இந்தோனேஷியா,சுமத்ரா தீவில், எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. 

சுலவேசி தீவில் உள்ள , "மவுண்ட் சினாபங் " எரிமலை தான் ,இன்று வெடித்துச் சிதறி, கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கியுள்ளதனால், அப்பகுதியை பெரிய அளவில் புகை சூழ்ந்துள்ளது.


2016 ஆம் ஆண்டிலேயே, இந்த எரிமலை வெடிக்கும் அபாய நிலையில் தான் இருந்துள்ளது.ஏனெனில், அவ்வப்போது நெருப்புகளை கக்கி வந்துள்ளது.எனவே, எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிப்படும் அபாய நிலைமை இருந்துள்ளது.

இவ்வாறான, ஒரு நிலையிலேயே, இன்று இந்த எரிமலை வெடித்துள்ளது.அதுமட்டுமா..இதிலிருந்து, பெரிய அளவில் நெருப்புக் குழம்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது,வானில் 6500 அடி உயரத்திற்கு பரவி உள்ளது.

இதன் காரணமாக, எரிமலைக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல்த் தாக்கத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள, முகமூடிகளை அணியுமாறும் ,அப்பகுதியில் விமானங்கள் இயக்குவதை தவிர்க்க வேண்டும் எனவும், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Author: verified_user

0 comments: